Monday, June 7, 2010

கடைசி வரைக் கனவுகள்....

எங்குறைந்தாலும் உடலின் மாறாத
தட்ப வெட்பம் போல மனதில்
உன் நினைவுகள்-மாற்றங்கள் மறந்து

சூழ்நிலை எதுவாயினும் ஆழ்நிலையில்
ஆழமாய் உன் சாயல்
அழியாத கோலமாய்

உனது வரிகளில் எனது கவிதையின்
அர‌ங்கேற்றம் - நித்தமும்

அநித்ய வாழ்கையில் அனிச்சையாய்
அனுதினமும் நீ - என்னுள் எரியும் தீ!

உன்னால் இன்று எல்லாரும் எல்லாமும்
நானும் எனக்கே அன்னியமாய்

உன் ஞாபகத் துளிகள் என் கண்களின் ஓரமாய்
காயத ஈரமாய் கடைசிவரை - நான்
உன் கனவுகளோடு!........

No comments: