Sunday, June 20, 2010

தோப்பில் நான் தனி மரம்..















தொலைவுதான் என்றாலும்
தொலைவேன் தான் என்றாலும்
உனை நோக்கிய என் பயணங்கள்
முடிவதேயில்லை..

கேளாதிருந்தாலும் உனக்கு
கேட்காதிருந்தாலும் என்
கொலுசுகள் உன் பேர் சொல்லி
புலம்புவதை நிறுத்துவதே இல்லை..

உனக்கு புரிந்த போதும்
புரியாதது போல் இருந்த போதும்
உன் பார்வை ஸ்பரிசம் படிந்த நேரம்
என் நயனங்களின் உரத்த சப்தங்கள்
உரங்கியதே இல்லை...

நீ பேசிய போதும் பேசாதிருந்த போதும்
என் இதழ்களின் மௌன மொழிகள்
ஓய்ந்ததே இல்லை....

ஒழிச்சலற்று உன் நினைவு மட்டும்
தாங்கி நிற்கும்
"தோப்பில் நான் இன்று தனி மரம்"

No comments: