Thursday, July 29, 2010

துளித் துளியாய்....

இது வரை நாம் பேசிய மணித்துளிகளை

மொத்தமாக அள்ளிக் கையில் தந்தாய்

நதி நீர் அள்ளிய கைகளாய்

பார்த்துக் கொண்டிருந்த போதே

துளித் துளியாய் சொட்டித் தீர்ந்தே போனது

தெரிந்தே தான் செய்திருப்பாய்

பதைக்கும் என் மனது என்று - ஆனால்

நீ அறிந்திருக்க நியாயம் இல்லை

ஒவ்வொரு துளியும் சொட்டிச் சேர்ந்த இடம்

பூமியில் நான் விதைத்த உன்

நினைவு விதைகளின் மேல் என்று....

Monday, July 26, 2010

வன்முறை....











நேற்று என் கையில் நீ
ப‌த்துத் திங்க‌ள் நான் செய்த‌
த‌வ‌த்தின் ப‌ல‌னாய் ‍
என்ம‌டியில் விழுந்த‌
ம‌ழ‌லைக் க‌விதையாய்...

நேற்று என் ம‌டியில் நீ
வ‌யிற் நிர‌ம்பிய‌ ம‌கிழ்வில்
என் முக‌ம் பார்த்து
உன் இத‌ழ்ம‌ல‌ர்ந்து சிரித்த‌ ப‌டி...

நேற்று என் தோளில் நீ
வெற்றிக் கோப்பை கையில் ஏந்தி
இத‌ய‌ம் முட்டிய‌ பெருமித‌த்துட‌ன்...

நேற்று என் காலில் நீ
புருஷ‌ ல‌க்ஷ‌ண‌ உத்தியோக‌த்துட‌ன்
என் ஆசி பெறுவ‌த‌ற்காய்...

இன்று என் கையில் நீ
ஒரு பிடி சாம்ப‌லாய்...

யாருக்கோ வைத்த‌ குண்டில்
அன்னிய‌மாய்ச் சிக்கி
அநியாய‌மாய் உயிர் விட்ட‌
அப்பாவி இளைஞ‌னாய்
க‌ருகிய‌ என் குல‌க் கொழுந்தாய்....

யாரோ ந‌ட‌த்திய‌ வ‌ன்முறையில்
வீழ்ந்த‌து என் த‌லைமுறை......

Saturday, July 10, 2010

தெளிவு....

மழையடித்து தூசி கழுவிய
பசுமர இலைகளாய்
துளிர்த்தது மனம்
உன் நினைவுகள் களைந்த கணத்தில்
கல்லெறிந்த குளமாய்
ஒரு நொடி குழம்பி
மறு நொடி தெளிந்தது
இலை மேல் நீர் கழுவிய தூசியல்ல
நீர் உறிஞ்சி உயிர் கொடுக்கும்
"வேர் நீ என்று"....

Thursday, July 1, 2010

வசீகரம்....













உயிர் சுமக்கும் உடலுக்கு உண்டு

ஜனனமும் மரணமும்

உன் நினைவு சுமக்கும் உணர்வுக்கு உண்டோ?...

பாசி படர்ந்த இதயக் குளத்தில்

வசீகரத் தாமரை உன் நினைவு

உனக்கான என் வரிகள் ஒவ்வொன்றும்

பாசி விலக்கி உனைச் சேரவே முயல்கின்றன..

விரல்களிலிருந்து விழும் முன்னமே

உன் விழிகளில் படிந்திட‌விழைகின்றன...

என் கண் பேசும் கவிதைகளுக்கும்

உன் இதழ் உணர்த்தும் பாடங்களுக்கும்

உவமை தேடியே பிணைகிற‌து நம் விர‌ல்க‌ள்...

உன் வ‌ர‌வால் என் வாழ்வின்

ஒவ்வொரு நாட்க‌ளும் தூசி த‌ட்ட‌ப் ப‌டுகிற‌து

ஒவ்வொரு நொடியும் வ‌ர்ண‌ம் ஏற்றப் ப‌டுகிற‌து

வ‌ளைந்து செல்லும் ந‌தியின் வ‌சீக‌ர‌ம் போல‌

உன் நினைவு சேக‌ரித்த

வார்த்தைக‌ளுக்கு ருசி அதிக‌மாகிற‌து

நில‌வின் கிர‌ண‌ம் பூமியில் விழுவ‌து போல்

ஓசையேதும் இன்றி விழுந்த‌து

என்னுள் உன் காத‌ல்...

உனைப் பார்க்கும் வேளை சிறு சொர்க‌ம்‍

என் இத‌ழோற‌ச் சிரிப்பில்...

நீளும் ஆயுள் ‍‍உன் விழியோற‌ உயிர்ப்பில்....