Thursday, July 29, 2010

துளித் துளியாய்....

இது வரை நாம் பேசிய மணித்துளிகளை

மொத்தமாக அள்ளிக் கையில் தந்தாய்

நதி நீர் அள்ளிய கைகளாய்

பார்த்துக் கொண்டிருந்த போதே

துளித் துளியாய் சொட்டித் தீர்ந்தே போனது

தெரிந்தே தான் செய்திருப்பாய்

பதைக்கும் என் மனது என்று - ஆனால்

நீ அறிந்திருக்க நியாயம் இல்லை

ஒவ்வொரு துளியும் சொட்டிச் சேர்ந்த இடம்

பூமியில் நான் விதைத்த உன்

நினைவு விதைகளின் மேல் என்று....

1 comment:

Unknown said...

கவிதை அருமை, பாராட்டுக்கள்.

துளிகள் விதைமீது சேர்ந்து விருட்சமாகும்,