Sunday, December 26, 2010

கூண்டுக் கிளி...















கண் சிமிட்டும் நொடிப் பொழுதில்
திறந்திருந்த கூண்டிலிருந்து
சிட்டாகப் பறந்தேன் விடியலை நோக்கி
என் விடுதலை தேடி....

முறிக்கப்பாடாத சிறகுகளால்
பறந்து திரிந்து முழுமையாய்
அனுபவித்தேன்_ நீண்ட நாளாய்
ஒடுக்கப்பட்ட என் சுதந்திரத்தை...

வெண் பஞ்சு மேகங்கள் மோதி
குளிர் காற்றின் ஈரம் முகர்ந்து
என் சிறிய நுரையீரல் நுரைத்துப் பொங்க‌
சுதந்திரக் காற்றை சுவாசித்தேன்...

பழங்கள் கொட்டைகள் தானியங்கள்
கண்டதெல்லாம் கொத்தித் தின்று
கொஞ்சும் குமரிகளின் காதோரம்
காதல் சொல்லி
குட்டிக் குழந்தைகளின்
தோளோடு குலவிச் சென்று...

சூரியன் தொடு மட்டும் உயரே எழும்பி
சட்டென்று தடாகம் தொட்டு
சிறகுகளைச் சிலிர்க்க வைத்து
மலர் மண் புழுதி அத்தனையிலும்
முகிழ்த்தெழுந்தேன்....

மாலை மயங்குகையில்
மனதோரம் சிறு நெருஞ்சி...
ம‌றுப‌டியும் கூண்ட‌டைந்தேன்

ஒரு துளி அன்புக்கு
ஒரு கிலோ மாமிச‌ம் கேட்கும்
முர‌ண்ப‌ட்ட‌ உல‌க‌த்தில்

சிற‌கொடிக்காம‌ல் த‌ன் உண‌வை
ப‌கிர்ந்த‌ளித்த‌ என் எஜ‌மான‌
துரோக‌ம் முன் சுத‌ந்திர‌ம்
க‌ச‌ந்து தான் போன‌து...

No comments: