Thursday, February 17, 2011

வாசனை தீண்டிடும்....

சில சமயம் வானவில்லாகவும்
சில சமயம் வண்ணங்களற்றும்
சில சமயம் கருப்பு வெள்ளையாகவும்
நினைவுத் திரையில் வந்து போகிறது
உனைப்பற்றிய நினைவலைகள்...

காற்றடித்துக் கலைய நேர்ந்தாலும்
மேகம் விட்டு மண் சேரும் மழை போல
உனை மட்டுமே சேர்கிறது எனது காதல்

இன்னமும் உறைந்தே உள்ளது
குளிர்ந்த இதழ்களில் உன்
சூடான முத்தம்...

நீ சிந்தும் ஒவ்வொறு புன்னகையும்
எனக்காகத்தான் என்று
மூச்சிழுது நுரையீரல் விரிக்கின்றேன்
முழுவதுமாய் சேமிக்க...

ஊமையாய் கிடந்த மூங்கிலுனுள்
காற்றாய் நுழைந்து
காதலிசைத்துச் செல்கிறாய்.

தென்றல் தழுவும் போதெல்லாம்
உன் வாசனை தீண்டிடும் முயற்சியில்
காதல் காமம் இரண்டும் அற்று
கண்கள் மூடி உனை உணர்கின்றேன்..

No comments: