Saturday, March 5, 2011

நீ வருவாயென....

ஆகாயம் இரண்டாக மண்மீது
உன் கண்ணின் கரு நீலம்
நான் கண்ட போது
உயிர் தூண்டும் மின்னல்கள்
உன் பார்வையோடு
உறங்க வைக்கும் பூங்காற்றும்
உன் வார்த்தையோடு....
காதலில் அஹிம்சை பேசி
கனவுகளில் இம்சிக்கிறாய்
ஊமைக்கொரு வார்த்தைபோல் வந்து
மௌனங்கள் சப்திக்கிறாய்
நீளும் இரவுகளையும்
மீளா நினைவுகளையும்
நீலக் கண்களில் நிரந்தர கர்பமாக்கி
என் தூக்கங்களைத் தூக்கிக் கொண்டு
தொலைதூரம் சென்றுவிட்டாய்.
காத்திருக்கிறேன்...
கழன்றுவிழும் காலத் துளிகளில்
ஏதோ ஒன்றில்
"நீ வருவாயென"...

No comments: