Saturday, March 19, 2011

உன் நினைவுகள் தின்று...




உடைந்த நிலவிலும் முழுதாய் உன் முகம்
தேயும் பிறையிலும் நிறையும் உன் நினைவு
கலையும் மேகத்திலும் சிதையாமல் உன்னுருவம்
காமச் சுவடுகள் அற்ற என் காதல் பாதையில்
தேவனாய் உன் வரவு
உன் காதல் துளி ஒன்று
என் இதயம் தொட்டு சிதறி

உனைச் சேர்ந்தது நூறாக
உதிரும் மழைச் சரங்களில்
நீ தட்டிவிட்ட சாரல் எது?
கால் நனைக்கும் அலைகளில்
எனை முத்தமிட்ட உனதலையின்
அடையாளம் எது?
தனிமையில் தேடுகின்றேன்
தனியாகத் தேடுகின்றேன்
தணியாமல் தேடுகின்றேன்
என் தனிமையையும் எனக்கு
அன்னியமாக்கி உன் நினைவுகளால் கொல்லுகிறாய்

பசி அடக்க விரல் சப்பும் குழந்தையாய் நான்
உன் நினைவுகள் தின்று .....

No comments: