Tuesday, May 31, 2011

நீ அங்கு நலமா?....




















நீ இருந்த பொழுதுகளில்
என் இரவெல்லாம் பௌர்ணமிகள்

நீ பிரிந்த இரவுகளில்
உன் நினைவுகளே நட்சத்திரங்கள்

பிரியும் முன் உன் பிரியத்தை
ஒரு துளி கண்ணீராகத்
தெளித்துச் சென்றாய்

என் தோட்டத்துச் செடிகளில்
வேருக்கும் வாசத்தை
அளித்துச் சென்றாய்

உன்னுடன் இருக்கையில்
மௌனங்கள் கூட
மலர் ஏந்திய வார்த்தைகளாய் மாறி
கவிதையாக உதிர்ந்தது

இன்று வார்த்தைகளே அந்நியமாகி
மௌனத்தில் கரிக்கின்றது...

உனக்காக இதழ் மலர்ந்த
என் சிரிப்புகள் யாவும்
இன்று பிறருக்கான
இதழ் விரிதலாகிவிட்டது...

பிரபஞ்சத்தையே சுருக்கியது
உன் நினைவு
நினைவுகளை விரிவாக்கியது
இப்பிரிவு....

வாழ்தலின் சுவாரசியம் கூட்டியவனே...

இறத்தலை விட
இங்கு நான் இருக்கிறேன்

நீ அங்கு நலமா?...

No comments: