Thursday, June 2, 2011

நீயும் நானும்.....










வாழ்க்கை பயணத்தில் தண்டவாளங்களாய்
நீயும் நானும்
எப்போதோ இணைகிறோம்
ரயிலின் பாதை மாற்றத்தில்

வாழ்க்கைப் பாதையில் பயணிகளாய் நாம்
பாதை ஒன்றாயினும்
திசைகள் வெவ்வேறாய்

வானத்தின் சூரியனாய் நீ சந்திரனாய் நான்
இருப்பிடம் ஒன்றென்றாலும்
இணைய முடியா துருவங்களாய்

மரத்தின் வேராய் நீ கனியாய் நான்
தொடர்பிருந்தும்
தொடமுடியா தூரத்தில்

அடிவானமாய் நீ கடல் முடிவாய் நான்
ஒன்றாய் தோன்றினாலும்
ஒட்டாத உயரத்தில்

இருந்தும்...
நாம் இருப்பது
இணைவோம் என்ற
நம்பிக்கையில்....

2 comments:

சிவகுமாரன் said...

அருமை.
இந்தப்
பயணங்கள் முடிவதில்லை.
இலக்கு தெரியாதிருந்தாலும்
இலக்கே இல்லாமல் இருந்தாலும் .

SOS said...

ஆமாம் சிவகுமரன். பாராட்டுகளுக்கு மிக நன்றி.