Saturday, June 25, 2011

களங்கமில்லா....















வீட்டில் வரன் பார்க்கையில்
வண்ணக் கனவுகள்
கண்களில் ஆயிரம்...

கண்வனாக ராமனை ரசித்தேன்
தீக்குளித்த சீதை
சிந்தையில் சிரித்தாள்...

கண்ணனை கனப் பொழுது
காதலித்தேன்
காதலிகள் தன் கதை சொல்லிக்
கரைந்தனர்...

முருகனை முழு மனதால்
மூடி வைத்தேன்
இரு மணைவிகள்
மாலையுடன் மறுத்தனர்....

நளனுக்காக நானமுடன்
நடை பயின்றேன்
நடுக்காட்டில் தமயந்தி
தடை போட்டாள்...

கனவுகள் கலைந்திட
நான் மட்டும்
கண்ணகியாய், நளாயினியாய்,
சீதையாய்
இன்னும் கன்னியாய்
காத்திருக்கிறேன்
களங்கமில்லாக் கணவனுக்காக..

No comments: