Saturday, July 16, 2011

விடை கொடு...















சில வார்த்தைகள் எழுதப் படுவதில்லை
உணரப் படுகின்றன...
சொற்களற்றும் நீ உணர்ந்த
என் வார்த்தைகள் போல...

அதனாலேயே இன்று பிரிவோம்...

பின் என்றேனும் ஒரு நாள்
மழையின் தூறலில்
இடிகளின் சப்தத்தில்
மின்னல்களின் நடுவில்...

இருளின் ஆரம்பத்தில்
ஒளிகளின் சேர்க்கையில்
மாலையின் மயக்கத்தில்
சுட்டெரிக்கும் சூரியப் பகலில்
நிலா பொழியும் குளிர் இரவில்...

ஏதோ ஒரு தருணத்தில்
சந்திக்க நேர்ந்தால்...

மனம் நெகிழ்ந்து
குற்றவுணர்வற்ற
ஒரு புன்னகை
பரிமாறிக் கொள்வோம்...

அதற்காக இன்று பிரிவோம்...

விடை கொடு.....

No comments: