Tuesday, August 9, 2011

நானும் மழையாகிறேன்....













தூரத்தில் நீ இருந்தாலும்
என் இதயத்தில்
உன் நிழல் பரப்புகிறாய்...

மயிலிறகு வார்த்தை கொண்டு
என் அன்பை
எனக்கே சொல்லுகிறாய்...

சோர்வுகள் நனைத்த
என் புன்னகையை
நீ மட்டுமே
அடையாளம் காண்கிறாய்...

முகமூடி மனிதர்கள் நடுவே
மூச்சு முட்டுகிறது எனக்கு
மூழ்கிக் கொண்டிருக்கிறேன்

உன் குளிரிதழ் கொண்டு
என் நுனிவிரல் முத்தமிடு
நானும் மழையாகிறேன்....

1 comment:

கதம்ப உணர்வுகள் said...

அன்பு அசாத்தியமானது....
ஆழ்ந்து உள் செல்லக்கூடியது....
மனதை மயிலிறகால் வருடக்கூடியது....

கண்ணீர் துளிகளை தன் உள்ளங்கையால் தாங்கிக்கொண்டு சந்தோஷத்துளிகளை பெருவெள்ளமாய் நனைக்கக்கூடியது....

அன்பில் கரைந்து அன்பில் உருகி அன்பில் உயிர் துறந்துவிட துடிக்கும்...

தன்னலத்தை ஒதுக்கிவிட்டு அன்பை பிரவாகமாய் கொட்டும்....

அழகிய வரிகளால் அன்பாய் கோதுகிறது மனதை....

அன்பு வாழ்த்துகள் ஹேமா...