Saturday, August 13, 2011
உணர்வாயா?!...
திறக்கப்படாமல் இருக்கும் கதவு
தூசிகள் மட்டும் சுவாசித்த
மூடிய அலமாரியின் புத்தகங்கள்
யாரும் அமராமல் கிடக்கும்
மூன்றுகால் நாற்காலி
மீட்டப்படாமல் விட்ட வீணை
இவைகளை ஒத்திருக்கிறது
உன்னால் வாசிக்கப்படாத
என் கவிதைகள் பல...
என்றேனும் நீ அவைகளை
ஸ்பரிசிக்க நேர்ந்தால்
மக்கிய டயரியின் பக்கங்களில்
காய்ந்துவிட்ட எழுத்துக்களினூடே
என் உயிர் இன்னமும்
உனக்காக ஈரமாய் இருப்பதை
உணர்வாயா?!...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment