Tuesday, August 16, 2011

நீ எனது....












வாழ்வின் கசப்பான சங்கடங்களின்
தீர்வானதொரு நொடிப் போழ்தில்
நிகழ்ந்துவிட்டது நம் அறிமுகம்..

நட்பாகி நெகிழவும் இல்லை
காதலாகி கசிந்துருகவும் இல்லை
காமத்தில் சுயம் இழக்கவும் இல்லை

இன்னதென்றே புரிய முடியாததொரு
உறவின் மீட்சியாய் நீள்கிறது
நம் சந்திப்புகள்...

சில நேரங்களில் மலராக,நிலவாக
வானவில்லாக தேவதையாக
உருவகமாகிறேன்
நான் உனக்கு...

எப்போதும் வாசமாக ஒளியாக
நிறமாக தெய்வத்துவமாக
உணர்வாகிறாய்
நீ எனக்கு...

நீ எனது ராமன்

நான் சீதையல்ல
கௌசல்யை அல்ல
தசரதன் அல்ல
லக்ஷ்மணனும் அல்ல...

உன் இருப்பை புறவெளி தவிர
அகவெளியிலும் உணர முடிந்த
ஆழ்ந்த அன்பும் அளப்பறிய
நம்பிக்கையும் நிறைந்துள்ள
அனுமன் நான்...

உனது பெயரின் உச்சரிப்பு
போதுமானது
என் சுவாசத்தில்
வாசனை கூட்ட...

உன் நினைவுகளின்
சிறு துளி போதுமானது
எனதுயிரில் பூ பூக்க...

No comments: