Friday, September 2, 2011

மெது மெதுவாய்......











ஆழ் கடலில் எப்போதோ ஒரு பறவை
உதிர்த்துச் சென்ற சிறகைப் போல
இப்போது என் தனிமையில்
மிதக்கும் உன் நினைவு...


மரம் உதிர்த்த வரண்ட இலைகளை
பசுமையாக்கும் முயற்சியில்
மீண்டும் மீண்டும் நனைத்துக் கொண்டிருக்கும்
மழைத்துளியாய் உனில் சொட்டும்
நீ மறந்த என் ஞாபகம்

கல்லெறிந்து நீ போனபின்னும்
முன்னிலும் தெளிவாய் உன் பிம்பம்
என் மனக்குளத்தில்...

ஏதேச்சையாக என்றோ
உள் நுழைந்துவிட்ட உன் நினைவு
எனைப் பற்றி... சுற்றி...
மெது மெதுவாய் ஆட்கொள்கிறது
இன்று ஆட்கொல்லியாக....

No comments: