Monday, December 26, 2011

காயம் செய்யும் பூக்கள்....












நான் சிரமப்பட்டு வார்த்தைகளைச்
சேமித்து வாக்கியமாக்குகிறேன்
நீ மிகச் சிரத்தையாக முற்றுப் புள்ளி
வைத்துவிடுகிறாய்..

உன் காதல் எனை
மணிமேகலையாக்கிவிட்டது
என் இதயப் பாத்திரத்திலிருந்து
உன் நினைவுகளை
எத்தனைச் செலவழித்தாலும் தீர்வதேயில்லை

பூக்களால் காயப்பட்டுவிட்டேன்
முட்களையும் ஏன் எடுத்து வருகிறாய்?..
மௌனத்தைப் போர்த்திக் கொண்டு
நீ காலத்தை நிர்வாணமாக்குகிறாய்

துயரத்தின் பசி பொறுக்க மாட்டாமல்
நம் காதலைத் தின்றுவிட்டேன்
செரிக்கவும் இல்லை உமிழவும் முடியவில்லை
இதயத்தில் கல்லாக சமைந்துவிட்டது...

No comments: