Sunday, February 26, 2012

என்ன செய்து?....










எல்லாம் எனக்காகவே
என் நன்மைக்காகவே
என கட்டியம் கூறுகிறாய்...

என் மகிழ்ச்சியே உனது முக்கியம்
என சமரசம் செய்கிறாய்...

எங்கிருந்தாலும் நான்
நன்றாக இருக்க வேண்டும்
எனக் கூறியே விலகிச் செல்கிறாய்...

என் நல்லதுக்கே எனச் சொல்லி
பிரிவை சமாதானமாக்குகிறாய்...

அது சரி!...

நான் இருந்தால் தனே
நன்றாக இருக்க
நன்மையுடன் இருக்க
மகிழ்வுடன் இருக்க...

நீ இல்லாத என் இருத்தல்
இறத்தலுக்கு சமம் அல்லவா?...

என்ன செய்து உன் வாக்கை
காப்பாற்றப் போகிறாய்?

No comments: