Wednesday, March 7, 2012

கைம்பெண்....












இது உன் பிரிவுக்குப் பின் வந்த
என் தூய சோகம்
என் வாழ்நாள் முழுமைக்குமான
நித்ய விரதம்...

இதை மென் வண்ண உடை உடுத்தி
மையெழுதா கண் வழியே
தூய சந்தனப் பொட்டிடையே
சப்தமிடா கொலுசிடையே
தளரக் கட்டிய சடை வழியே
நம் தாம்பத்தியத்தின் மோனச் சின்னமாய்
வெளிபடுத்துகிறேன்...

கைம்பெண் பொட்டிடுதல்,
பூ வைத்தல் அலங்கரித்தல்
காலத்தின் கலாச்சார மாற்றம்...

மறுக்கவில்லை
மறுதலிக்கவுமில்லை...

இப் புரிதலும் பிரிதலும்
உறவும் இத் துறவும்
நமக்கான அந்தரங்கம்...

இதை மடமை என்போரும்
பேதமை என்போரும்
பழமை எனப் பழிப்போரும்
பழித்துவிட்டுப் போகட்டும்...

இது உனைச் சேர
நான் செய்யும் தவம்
உனக்கு மட்டும் புரிந்தால் போதும்...

No comments: