Friday, March 16, 2012

கண(ன)ங்கள்.....













கணங்கள் கடந்து கொண்டிருக்கின்றன
கனங்களாக...
நினைவுகளைக் கீரிக் கடந்து கொண்டு

உனை அடைந்ததின் கர்வமாக...
உன் பிரியத்தின் துளிகளாக...
உன் விலகலின் சாபமாக...
உன் துரோகத்தின் முட்களாக...
இதயத்தைக் கிழித்துக் கொண்டு
உதிரும் ரத்தமாக...

பல சமயங்களில் என் ஏமாற்றத்தின்
கண்ணீர்த் துளிகளாக..

இன்னமும் கணங்கள்
கடந்து கொண்டுதான் இருக்கின்றன
கனங்களாக..

No comments: