Thursday, August 22, 2013

ஆ(கா)தலால்.....

மழை நேரத்தில் நாம் சந்தித்ததில்லை
மழை நனைத்த சாலையில் நாம்
கை கோர்த்து நடந்ததில்லை..

மழைத்துளிகளின் இடைவெளியில் நாம்
ஒதுங்கி நனைந்ததில்லை...
சாரல்களில் ஓரத்தில் 
உடல் ஒட்டி நின்றதில்லை..

இருந்தும் மழை வரும் போதெல்லாம்
நீ வருவதாகவே நினைக்கிறேன்
ஆ(கா)தலால் நனைகிறேன்...