Thursday, August 22, 2013

ஆ(கா)தலால்.....

மழை நேரத்தில் நாம் சந்தித்ததில்லை
மழை நனைத்த சாலையில் நாம்
கை கோர்த்து நடந்ததில்லை..

மழைத்துளிகளின் இடைவெளியில் நாம்
ஒதுங்கி நனைந்ததில்லை...
சாரல்களில் ஓரத்தில் 
உடல் ஒட்டி நின்றதில்லை..

இருந்தும் மழை வரும் போதெல்லாம்
நீ வருவதாகவே நினைக்கிறேன்
ஆ(கா)தலால் நனைகிறேன்...

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அடடா... மிகவும் ரசித்தேன்...

வாழ்த்துக்கள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நினைக்கிறேன்
ஆ(கா)தலால் நனைகிறேன்...//

மிகவும் அருமையான கவிதை.

படிக்கும் போது மழைச்சாரல் வீசுவது போன்றதோர் உணர்வு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

-=-=-=-=-

அன்புடையீர், வணக்கம்.

என் தளத்தில் சமீபத்தில் இரண்டு சிறப்புப்பதிவுகள் வெளியிட்டு இருந்தேன். தங்களிடம் தகவல் சொல்ல எவ்வளவோ முயற்சித்தேன்.

தங்கள் தளமே திறக்கவில்லை.

அதனால் என்னால் முடியாமல் போய் விட்டது.

விருப்பமும் நேர அவகாசமும் இருந்தால் அவசியம் வாங்கோ. கருத்துச்சொல்லுங்கோ.

இணைப்பு:

http://gopu1949.blogspot.in/2013/08/blog-post.html

ஆயிரம் நிலவே வா ! ..... ஓர்
ஆயிரம் நிலவே வா !!

http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html

அறுபதிலும் ஆசை வரும் !

SOS said...

மகிழ்ச்சி திரு. தனபாலன். ரசனைக்கு நன்றி .


அவசியம் தங்களது பகிர்வை விரைவில் படித்து கருத்திடுகிறேன் VGK சார். தங்கள் வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.