Saturday, October 19, 2013

உறங்க வைக்க முடிவதில்லை...

பேசிய வார்த்தைகளை
உதைத்து உருட்டிக்கொண்டே
மௌனத்தால் முற்றுப் புள்ளியாக்கிவிட்டாய்
நம் நினைவுகளை...

விளையாட்டு முடிந்த மைதானத்தில்
திக்கற்று அலையும் வெற்றுக் காகிதமாய்,

அகால வேளையில்
பழுதடைந்த தண்டவாளத்தில்
கைவிடப்பட்ட ஒற்றை ரயில் பெட்டியின்
தனிமையோடு அலைகிறது மனது..

எரிமலையின் ஆழத்தில்
நிச்சலனத்தில் உறைந்திருக்கும்
உனக்கான சொற்களை என்னால்
ஒருபோதும் உறங்க வைக்க முடிவதில்லை...

நீ வீசி எறிந்த சொற்களின் மாபெரும்
த்தில் நசுங்கிக் கிடக்கின்றன
நமதான ஒரு ஒற்றைக் கனவும்
அதன் பெருவெடிப்பில்
கருகிச் சிதறிய இக் கடைசிக் கவிதையும்...

Monday, October 14, 2013

பக்கங்களற்ற புத்தகம்...


பக்கங்களற்ற புத்தகம் ஒன்று
சொல்லையும் பிம்பத்தையும் பிரித்து
சொற்களின் மீது மனக் கசப்பை
ஏற்றி விட்டு பிரிந்து கிடக்கிறது..

கடைசி நட்சத்திரம் வரை
நீண்டு கொண்டிருக்கும் இரவில்
என் நிலவு உதிர்ந்து கொண்டிருக்கிறது
சென்னிறமாக...

காலியான சத்திரத்தில் எஞ்சி இருக்கும்
பயணியின் நினைவு போல...