எனதானெதென்று
ப்ரத்தியேகமானதொன்று
பத்திரமாய்த்தான்
வைத்திருந்தேன்..
மிகப்
ப்ரயத்தனத்துடன்
கெஞ்சி
கொஞ்சியே
எடுத்தாண்டுவிட்டாய்..
திருப்புதலுக்கானவோ
திரும்புதலுக்கானவோ
எந்த
முகாந்திரமும் இன்றி...
கலங்கித்
தவிக்கிறேன்
ஊமையாய்
சுட்டெரிக்கும்
கடுங்கோடை
வெயிலாயினும்
உரத்துப்
பெய்யும் கன மழையாயினும்
உன்
நினைவைத் தடுக்க முடியவில்லை
தயை
கூர்ந்து
எடுத்துச்
சென்ற எனதான
க(ற்)ருப்புக்
குடையை
திரும்பக்
கொடுத்துவிடேன்...