Sunday, January 26, 2014

திரும்ப....

எனதானெதென்று
ப்ரத்தியேகமானதொன்று
பத்திரமாய்த்தான் வைத்திருந்தேன்..

மிகப் ப்ரயத்தனத்துடன்
கெஞ்சி கொஞ்சியே
எடுத்தாண்டுவிட்டாய்..
திருப்புதலுக்கானவோ
திரும்புதலுக்கானவோ
எந்த முகாந்திரமும் இன்றி...

கலங்கித் தவிக்கிறேன்
ஊமையாய் சுட்டெரிக்கும்
கடுங்கோடை வெயிலாயினும்
உரத்துப் பெய்யும் கன மழையாயினும்
உன் நினைவைத் தடுக்க முடியவில்லை

தயை கூர்ந்து
எடுத்துச் சென்ற எனதான
க(ற்)ருப்புக் குடையை
திரும்பக் கொடுத்துவிடேன்...

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

நினைவு அப்படித்தான்...

கருப்புக் குடை வேண்டுமானாலும் கிடைக்கலாம்...

SOS said...

ம் ... :-)நன்றி தனபாலன் சார்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்

வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்