Wednesday, April 23, 2014

என் வாசலில் நீ...



என் வாசலில்
உரைந்துவிட்டிருந்தது
ஒரு பனித்துளி
முந்தைய இரவின் இனிமைகளோடு...

நீதானே!...


யார் சொன்னது?
ஆண்கள் கருவை சுமக்க
முடியாது என்று..
என் கவிதைகளுக்கான
கருவை சுமப்பதே நீதானே!....

Monday, April 21, 2014

உன் வரவு....

கொண்டாடுவதற்கு
எதுவும் இல்லாத நாளாகத் தான்
அன்று இருந்தது
நீ வருவதற்கு முன்பு வரை...

Friday, April 18, 2014

ஈரம்...



அருந்தி முடித்த தேநீர்
கோப்பையில்
சொட்டிக் கொண்டிருந்தது
உன் நினைவு
மறுபடியும் நனைகின்றன
என் இதழ்கள்...

ஊஞ்சல்...



உனக்கு எழுதியதைப் படிக்கையிலும்
நீ எழுதியதைப் படிக்கையிலும்
காலால் உந்தித் தள்ளும்
என் கொலுசின் சினுங்கலையும்
உதட்டின் சுழிப்பையும்
காற்றின் விசையையும்
ஒரு சேர உன் திசை நோக்கி
எடுத்துச் செல்லும்
என் வீட்டு ஊஞ்சல்..

Monday, April 7, 2014

எப்படி..?!!!..
















ஓடும் நீராகத்தானே இருந்தேன்
மலராய் எப்படிப் பூத்தாய்?!

கடும் பாறையாகத்தானே இருந்தேன்
கொடியாய் எப்படி படர்ந்தாய்?!

சுடும் நெருப்பாகத்தானே இருந்தேன்
நீராய் எப்படி அணைத்தாய்?!

நிலவு மட்டும் சுமந்த வானமாக இருந்தேன்
நட்சத்திரங்களாகி நிரம்பி வழிகிறாய்

மறக்கப்பட வேண்டும் என்பதாலேயே
மீண்டும் மீண்டும் நினைவுக்கு வருகிறாய்...