Thursday, May 15, 2014

நிலா நிலா ஓடிவா...


தூளியில் குழந்தையின் சினுங்கல்
நெளிகிறது நிலா
முற்றத்து நீரில்...


நேற்றைய நினைவில்
குழந்தை காட்டியது அம்மாவுக்கு
தோசைக்கல்லில்
நிலா..

தேநீர் கோப்பையில்
இன்னுமொரு சொட்டுத் தேன்
குழந்தையின் தொடுகை..

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தூளியில் உள்ள குழந்தையே ஓர் அழகு நிலாவாக உள்ளது.

தேனாக இனிக்கும் கவிதை வரிகள் அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.