Thursday, November 27, 2014

சில கவிதைகள்......

நீ
நான்
சில கவிதைகள்
சொல்வதற்கும்
சொல்லும் போதே மறப்பதற்கும்...

Thursday, November 13, 2014

இம்மழை.....

சிறு தூரல்களில்
உன் புன்னகையையும்
பூஞ் சாரல்களில்
உனதன்பையும்
தொடர் பொழிவுகளில்
உன் பேச்சையும்
அடித்துப் பெய்கையில்
உன் கோபத்தையும்
எப்போதும் இம்மழை
உனை
நினைவூட்டுவதாகவே இருந்துவிடுகிறது..

நீ இல்லை....


அடித்துப் பெய்கிறதே?!...
இந்த மழைக்கான
மேகம்
நீ இல்லை....