Thursday, November 13, 2014

இம்மழை.....

சிறு தூரல்களில்
உன் புன்னகையையும்
பூஞ் சாரல்களில்
உனதன்பையும்
தொடர் பொழிவுகளில்
உன் பேச்சையும்
அடித்துப் பெய்கையில்
உன் கோபத்தையும்
எப்போதும் இம்மழை
உனை
நினைவூட்டுவதாகவே இருந்துவிடுகிறது..

3 comments:

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com.au/2014/11/blog-post_26.html?s
வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..

தனிமரம் said...

அழகான கவிதை மழைகூட ஞாபகத்தை மீட்டிவிடுகின்றது. வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்

SOS said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மற்றும் தனிமரம்.