Monday, December 15, 2014

உனக்கும் எனக்கும் நடுவே....

உனக்கும் எனக்கும் நடுவே
நிறைய கொஞ்சல்கள்
இருந்தன
முரண்பட்ட கெஞ்சல்கள்
இருந்தன
கேலிகள் இருந்தன

நிறைய கவிதைகள்
இருந்தன
கூடவே சின்ன சின்னதாய்
சில பொய்களும்
மத்தாப்புச் சிதறலாய்
சில சிரிப்புகளும்...

இப்போது
உனக்கும் எனக்கும் நடுவே
பொதுவான மௌனம்
காற்றின் இடைவெளியை
நிரப்பியபடி ஊஞ்சலாடிக்
கொண்டிருக்கிறது...

உன் பக்கம் வருகையில்
என் முகத்தைப் பார்த்தபடியும்
என் பக்கம் திரும்புகையில்
உன் முகத்தைப் பார்த்தபடியும்....

2 comments:

செய்தாலி said...

அருமை

SOS said...

நன்றி செய்தாலி சகோ.