Saturday, May 30, 2015

வரம்..

பேசாத என் வார்த்தைகளை
கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது
உன் மௌனம்
மீள் சந்திப்பில்
பதம் பார்க்காமலிருக்க
மறதியை வரமாக்கித் தரட்டும்
உன் கடவுள்..

Wednesday, May 27, 2015

நேசக் காடு...

நேசக் காடுகளில்
காமத்தீ மூட்டுவது
காதல் சதுரங்கத்தில்
ராணியை இழப்பதாகும்...
____________________


சொல்லுறுவிய மௌனத்தில்
எஞ்சி நிற்கிறது
பெருங்காற்றின்
பேரிரைச்சல்.