skip to main |
skip to sidebar
கடிகார
முட்களாய்
சுற்றி
வருகிறது
உன்
நினைவுகள்
நெஞ்சுக்
கூட்டில்
பெண்டுலமாய்
ஆடுகிறது
விழிகள்
நீ நகரும்
திசை
நோக்கி
அலாரமாய்
அதிர்கிறது
இதயம்
உன்
விரல் நுனி
தீண்டலில்
பன்னிரு
முறையல்ல
பன்னிரண்டிலாவது
சேர்ந்து
காதல்
சமைப்போம்
வா...
உனை
நனைத்துக் கொண்டிருக்கும்
அம்
மழையின்
ஏதோ
ஒரு துளியில்
கரைந்து கொண்டிருக்கிறேன்
நான்....