Monday, September 7, 2015

தாய்ப் பறவை....

என்னால் குழந்தைகள்
இருக்கும் அறையை
சாத்தி வைக்கவே இயலாது
அப்படிச் செய்தால்
எனக்கும் அவர்களுக்குமான
தொடர்பு விடுபட்ட
உணர்வு வருகிறது கூடவே
அவர்களைப் பற்றிய
ஒரு பாதுகாப்பின்மையும்
கோழி தன் குஞ்சுகளைக்
சிறகுக்குள்
காப்பது போலவே தான்
எனக்குள் அவர்களை
பொத்தி வைத்துக் கொள்கிறேன்
வரக்கூடும் ஒரு நாள்
குஞ்சுகள் பருந்தென
சிறகு விரித்து பறந்துவிடக் கூடும்
அப்போதும் நான் கோழியாகவே
அவர்கள் உதிர்த்துவிட்டுப் போன
இறகுகளை சேமித்துக் கொண்டு
அன்னாந்து பார்த்திருப்பேன்
கவலைகள் மறைத்த பெருமிதத்தோடு...

No comments: