Saturday, October 31, 2015
Friday, October 30, 2015
Thursday, October 29, 2015
Wednesday, October 28, 2015
மறக்க முடியாத மே 2014.
மே மாதம் 2014 மறக்க முடியாத மகிழ்வான தருணங்களைக் கொடுத்தது. இம் மாதத்தில் தான் எனது கவிதை முதன் முதலாகபுத்தகத்தில் அச்சேறியது. மல்லிகை மகள் மாத இதழில். அச்சேற்றிய மல்லிகை மகள் இதழ் ஆசிரியர்
திரு. சிவஞானம் சாருக்கு எனது மகிழ்வான நன்றிகள்.
இதே மாதத்தில் மீண்டுமொரு ஆச்சரியம். முன்னனி வார இதழான குமுதத்திலும்(28.05.2014 தேதியிட்ட) குழந்தைகளைப் பற்றி எழுதிய கவிதைகள் பிரசுரமாகின.
பிரசுரித்த குமுதம் இதழ் ஆசிரியர் திரு. ப்ரியாகல்யாணராமன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Monday, October 26, 2015
பிரசுரமான கவிதை - தினமணி -”மது ஒழிப்பு”
தினமணி மின் நாளிதழில் “ மது ஒழிப்பு” என்ற தலைப்பின் கீழ் எனது கவிதை.
பிரசுரித்தமைக்கு நன்றி தினமணி மற்றும் திருமதி. உமா சக்தி.
பிரசுரித்தமைக்கு நன்றி தினமணி மற்றும் திருமதி. உமா சக்தி.
மது ஒழிப்பு
மது மது மது
அன்பைக் கெடுக்குமது
மரியாதைக் குலைக்குமது
குடும்பம் தவிர்க்குமது
உயர்வைக் தடுக்குமது
மனதைக் கலைக்குமது
பண்பைக் தொலைக்குமது
குளிர்ந்த நிலையில் கசந்த
திரவம்
உடனே செய்யுமே உபத்திரவம்
மதுவில் தொடங்கி
மாதில் தொடர்ந்து
வாழ்வைக் குடித்து
மரணத்தில் முடிக்கும்
மதுவுக்கு
விலக்கும் வேண்டாம்
ஒழிப்பும் வேண்டாம்
முற்றிலும் செய்வோம் மது
அழிப்பு
அரசு செய்யட்டும்
அமைச்சர் செய்யட்டும்
ஆண்டி செய்யட்டும்
குப்பம் சுப்பன் பெருமாள்
பேராண்டி
யாரோ தொடங்கட்டும்
என்ற எண்ணம் தவிர்த்து
தனிமதன் தன்
ஒழுக்கத்திலிருந்து
துவங்கட்டும்
மது ஒழிப்பும் மது
அழிப்பும்…
Sunday, October 4, 2015
Subscribe to:
Posts (Atom)