Sunday, January 3, 2016

மழை....

கொட்டித் தீர்த்த மழை
கழுத்தளவு தண்ணீர்
அப் பள்ளி அறையில்
ஒண்டியிருந்த
கூட்டத்தின் நடுவே
"அம்மா"... என்றதொரு கேவல்

அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு
கரைபடிந்த பாவாடையும்
கலங்கிய கண்களுமாய்
பதின்வயதுச் சிறுமி...

சுற்றியிருந்த அத்தனை
கைகளும் கிழிக்கத் தொடங்கின
தத்தம் சேலை நுனிகளையும் துப்பட்டாத் துணிகளையும்
வேட்டி முனைகளையும்
திகைத்து நின்ற
"அம்மாவைத்" தவிர...

No comments: