Thursday, February 11, 2016

நினைவில் மிதக்கும் என் வீடு...

வெள்ளம் புகுந்த என் வீடு
மூழ்கிய கட்டில் மெத்தை சோபா
உடைந்துவிட்டிருந்த
நாற்காலி மேசை
பழுதடைந்திருந்த டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங்மெஷின்
நனைந்து போயிருந்த
தலையணைகள் புத்தகங்கள்
ஊறிப்போயிருந்த
அலமாரிகள் பலகைகள்
மிதந்து கொண்டிருந்த
பாத்திரங்கள் சிலிண்டர்கள்
அடித்துப் போய்விட்ட உப்பு புளி
பருப்புப் பொட்டலங்கள்
வெள்ளம் வடிந்து சுவடு தேய்ந்த பின்னும்
நினைவில் மிதக்கும்
என் வீடு போலவே
வெள்ள நீரும்
தான் இருந்திருந்த
தாய் நிலத்தை நினைவு கூர்ந்து
வந்து போயிருக்குமோ?!!!...

1 comment:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//நினைவில் மிதக்கும் என் வீடு போலவே வெள்ள நீரும் தான் இருந்திருந்த தாய் நிலத்தை நினைவு கூர்ந்து வந்து போயிருக்குமோ?!!!...//

இருக்கலாம். நல்லதொரு கற்பனை. பகிர்வுக்கு நன்றிகள்.