Sunday, June 26, 2016

துரோகத்தின் முதல் கத்தி..

இதழ் முத்தம் காயும் முன்னே
நீ பிடி தளர்த்தி
தள்ளிச் சென்ற
குருதி ஒழுகிய
என் அடி வயிற்றுக்
குறுங்கத்தியின் பிடியை
இறுகப் பற்றியபடி
நினைவு தப்பினேன்
கண்ணில் உறைந்த காதலோடும்
உன் வெள்ளைச் சட்டையில்
அப்பிக் கிடக்கும்
சிவப்புக் கறையை
எதைக் கொண்டு நீக்குவாயோ
என்ற கவலையோடும்…

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

துரோகம் + கத்திக் கவிதை
வருத்தம் தருவதாக உள்ளது.

SOS said...

🙁