Wednesday, August 9, 2017

நானில்லாத என் வீடு...


ஒவ்வொரு முறை
கடக்கையிலும்
அனிச்சையாக
கண்கள் தழுவி விட்டுத்தான்
மீள்கின்றன
சாய்மானத் திண்ணையையும்
பவளமல்லி உதிர்ந்திருக்கும்
கோலமிட்ட மண் வாசலையும்..

No comments: