Sunday, June 20, 2010

தோப்பில் நான் தனி மரம்..















தொலைவுதான் என்றாலும்
தொலைவேன் தான் என்றாலும்
உனை நோக்கிய என் பயணங்கள்
முடிவதேயில்லை..

கேளாதிருந்தாலும் உனக்கு
கேட்காதிருந்தாலும் என்
கொலுசுகள் உன் பேர் சொல்லி
புலம்புவதை நிறுத்துவதே இல்லை..

உனக்கு புரிந்த போதும்
புரியாதது போல் இருந்த போதும்
உன் பார்வை ஸ்பரிசம் படிந்த நேரம்
என் நயனங்களின் உரத்த சப்தங்கள்
உரங்கியதே இல்லை...

நீ பேசிய போதும் பேசாதிருந்த போதும்
என் இதழ்களின் மௌன மொழிகள்
ஓய்ந்ததே இல்லை....

ஒழிச்சலற்று உன் நினைவு மட்டும்
தாங்கி நிற்கும்
"தோப்பில் நான் இன்று தனி மரம்"

Thursday, June 17, 2010

சுயம் இழந்த தேவதைகள்...















அவிழ்த்து விடுங்கள்
வெள்ளைத் தேவதையின் கருப்புக் கட்டை
எங்கேனும் சென்று ஓடி ஒளியட்டும்...

இல்லையேல் எடுத்துவிடுங்கள்
கையின் தராசை
நிலை சாய்ந்துவிட்ட முட் கம்பியால்
குத்திக்கொள்ளும் தற்கொலையாவது
தடுக்கப்படட்டும்

இத்தனை நாள் பொறுத்து, நீதிக்குத்தான்
நெருப்பு வைத்தோம்
பாவம் தேவதைக்கும் வேண்டாம்...

சுயநல அரக்கர்கள் மத்தியில்
சுயம் இழந்த தேவதைகள் ஏராளம்

இரக்கமற்ற தீர்ப்புகளை எழுதிவிட்டு
ஒடிவது பேனா முள் மட்டுமல்ல
நீதியின் நாடியும் தான்...

இங்கே நியாயங்கள் உறங்குவதில்லை
தட்டி எழுப்ப...
உறங்குவது போல் பாசாங்கு செய்கிறது

வேண்டுமென்றே தவறான
இலக்கு சுட்ட சரியான குறி?!...

என்ன சொல்லி என்ன?..
செய்தித்தாள் மடிக்கும் முன்னமே
மறப்பது நம் வாடிக்கை

நாளையும் தொடரும் இதே வேடிக்கை.....

Monday, June 7, 2010

கடைசி வரைக் கனவுகள்....

எங்குறைந்தாலும் உடலின் மாறாத
தட்ப வெட்பம் போல மனதில்
உன் நினைவுகள்-மாற்றங்கள் மறந்து

சூழ்நிலை எதுவாயினும் ஆழ்நிலையில்
ஆழமாய் உன் சாயல்
அழியாத கோலமாய்

உனது வரிகளில் எனது கவிதையின்
அர‌ங்கேற்றம் - நித்தமும்

அநித்ய வாழ்கையில் அனிச்சையாய்
அனுதினமும் நீ - என்னுள் எரியும் தீ!

உன்னால் இன்று எல்லாரும் எல்லாமும்
நானும் எனக்கே அன்னியமாய்

உன் ஞாபகத் துளிகள் என் கண்களின் ஓரமாய்
காயத ஈரமாய் கடைசிவரை - நான்
உன் கனவுகளோடு!........

Wednesday, June 2, 2010

நியதி...

நன்நீர் நதியாகினும்
உப்புக்கடல் சேர்வது நியதி போல‌
உன் உள் நோக்கியே எனது பயணம்
உன்னுள் எனக்கான
உறைவு அற்ற போதும்.....