Wednesday, November 9, 2016
Wednesday, July 20, 2016
பிச்சையல்ல பிரியங்கள் …
காரணங்கள்
எதுவாகவோ
இருந்துவிட்டுப்
போகட்டும்
அவகாசம்
எதுவுமற்ற
கைவிடப்பட்ட
பொழுதொன்றில்
உன்
மீதான நம்பிக்கையை
தேர்ந்த
கறிக்காரன் போல்
ஒரே
வெட்டில் நீ
அறுத்தெறிந்த
போது
வன்மத்தின்
சாயல்களைக் கொண்டிருந்ததன
உன்
நேசங்கள்
அலட்சியங்கள்
துளைத்த
என்
முதுகை
உன்
புறக்கனிப்பின் சுவற்றில்
சாய்க்கிறேன்
ஊடறுத்துச்
சென்று ருசி பார்க்கிறது
இரத்தவாடை
நிரம்பிய
என்
ஆதிக் காதலின் இரைஞ்சுதல்களை
என்
பிரியத்தை பிய்த்தெடுக்கும்
உரிமையை
யார் தந்தது உனக்கு?
சொற்கள்
எறிந்து தீர்ந்தாகிவிட்டதென்றா
மௌனத்தை
எறிகிறாய்?
சூல்
கொண்ட வெட்டுக்கிளியின்
அடி
இறகை விலக்கி
உன்
பல் குத்தும் குச்சியால்
முட்டைகளை
நிரடுவது போலவே
நம்
நேசத்தையும் நிரடுகிறாய்
பிச்சையென்று
நினைத்துவிட்டாயோ
பிரியங்களை!!?..
பிடிமானங்களைத்
தகர்த்தபின்
துக்க
வீட்டில் சிதறிக் கிடக்கும்
பூக்களின்
வாசனையைப் பற்றி
எதற்கினி
ஆராய்ச்சி?Sunday, June 26, 2016
Monday, May 23, 2016
முதல் கவிதைத் தொகுப்பு - “மௌனத்தின் சப்தங்கள்”
தலைப் பிரசவத்தின் பின்னான என் முதல் பிரசவம், ஆம் எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கும் உயிர் சேர்த்து நான் பிரசவித்த என் கவிதைக் குழந்தை “மௌனத்தின் சப்தங்கள்” ஆக இன்று என் கைகளில். 11.05.2016 என் வாழ்வில் மறக்கமுடியாத நாள். இரண்டு விசேஷ சம்பவங்களை கொண்டிருக்கும் நாள். ஒன்று எங்கள் மகன் அத்வித்தின் உபநயன விழா. மற்றொன்று, அதே நாளில் விழாவின் தொடர்ச்சியாக எளிய முறையில் அரங்கேறிய என் முதல் கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா.
சந்தியா பதிப்பகம் திரு. நடராஜன் அவர்கள் கவிதைத் தொகுப்பை வழங்க, தொழிலதிபரும், கரூர் அரவிந்-ஏ-டிரேடர்ஸ் ன் உரிமையாளருமான
திரு.வி. தங்கவேலு அவர்கள் பெற்றுக் கொண்டார். பங்கேற்று, வாழ்த்தி விழாவினை சிறப்பித்த இருவருக்கும் எனது பணிவான வணக்கங்கள் மற்றும் அன்று நடந்த இரு விழாக்களிலும் பங்கு கொண்டு, தொகுப்பை பெற்றுக் கொண்டு வாழ்த்தி உற்சாகமளித்த உறவுகள் மற்றும் நட்புகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
பதட்டம், அவசரம் காரணமாக சிற்சில தவறுகளை கொண்டுள்ள போதும், கைகளில் தவழும் புத்தகம் பார்க்கையில், இளம் சிசுவை நுகருவதைப் போன்ற ஒரு நெகிழ்வும் உற்சாகமும் ஏற்படாமல் இல்லை.
கலாப்ரியா, கல்யாண்ஜி என மேலும் பல ஜாம்பவான்களின் படைப்புகளை வெளியிட்டிருக்கும், வெளியிட்டுக் கொண்டே இருக்கும் சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக என்னுடைய தொகுப்புமா?!...நினைக்கையிலேயே பரவசத்துடன் கூடிய ஒரு வித பயமும் பதட்டமும் கலவையாக தோன்றுகிறது.
இத் தொகுப்பு எந்த அளவு உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் எனத் தெரியாது. நான்கு சுவற்றுக்குளான என் உலகத்தில் நான் எழுதிய கிறுக்கல்களை கவிதைகள் எனக் கொண்டு, நம்பிக்கையுடன் ஊக்கமளித்து, மிகக் குறுகிய கால அவகாசத்தில் பிரசுரித்து தந்த சந்தியா பதிப்பகத்தாருக்கும், முழு முனைப்புடன் இதை செயல்படுத்தி, சாத்தியமாக்கிய என் கணவர் பாலாஜிக்கும் நன்றிகள் பல.
Sunday, March 6, 2016
Saturday, February 27, 2016
Thursday, February 11, 2016
நினைவில் மிதக்கும் என் வீடு...
வெள்ளம் புகுந்த என் வீடு
மூழ்கிய கட்டில் மெத்தை சோபா
உடைந்துவிட்டிருந்த
நாற்காலி மேசை
பழுதடைந்திருந்த டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங்மெஷின்
நனைந்து போயிருந்த
தலையணைகள் புத்தகங்கள்
ஊறிப்போயிருந்த
அலமாரிகள் பலகைகள்
மிதந்து கொண்டிருந்த
பாத்திரங்கள் சிலிண்டர்கள்
அடித்துப் போய்விட்ட உப்பு புளி
பருப்புப் பொட்டலங்கள்
வெள்ளம் வடிந்து சுவடு தேய்ந்த பின்னும்
நினைவில் மிதக்கும்
என் வீடு போலவே
வெள்ள நீரும்
தான் இருந்திருந்த
தாய் நிலத்தை நினைவு கூர்ந்து
வந்து போயிருக்குமோ?!!!...
மூழ்கிய கட்டில் மெத்தை சோபா
உடைந்துவிட்டிருந்த
நாற்காலி மேசை
பழுதடைந்திருந்த டிவி ஃப்ரிட்ஜ் வாஷிங்மெஷின்
நனைந்து போயிருந்த
தலையணைகள் புத்தகங்கள்
ஊறிப்போயிருந்த
அலமாரிகள் பலகைகள்
மிதந்து கொண்டிருந்த
பாத்திரங்கள் சிலிண்டர்கள்
அடித்துப் போய்விட்ட உப்பு புளி
பருப்புப் பொட்டலங்கள்
வெள்ளம் வடிந்து சுவடு தேய்ந்த பின்னும்
நினைவில் மிதக்கும்
என் வீடு போலவே
வெள்ள நீரும்
தான் இருந்திருந்த
தாய் நிலத்தை நினைவு கூர்ந்து
வந்து போயிருக்குமோ?!!!...
Thursday, February 4, 2016
Thursday, January 21, 2016
Saturday, January 16, 2016
Sunday, January 3, 2016
மழை....
கொட்டித் தீர்த்த மழை
கழுத்தளவு தண்ணீர்
அப் பள்ளி அறையில்
ஒண்டியிருந்த
கூட்டத்தின் நடுவே
"அம்மா"... என்றதொரு கேவல்
அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு
கரைபடிந்த பாவாடையும்
கலங்கிய கண்களுமாய்
பதின்வயதுச் சிறுமி...
சுற்றியிருந்த அத்தனை
கைகளும் கிழிக்கத் தொடங்கின
தத்தம் சேலை நுனிகளையும் துப்பட்டாத் துணிகளையும்
வேட்டி முனைகளையும்
திகைத்து நின்ற
"அம்மாவைத்" தவிர...
கழுத்தளவு தண்ணீர்
அப் பள்ளி அறையில்
ஒண்டியிருந்த
கூட்டத்தின் நடுவே
"அம்மா"... என்றதொரு கேவல்
அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு
கரைபடிந்த பாவாடையும்
கலங்கிய கண்களுமாய்
பதின்வயதுச் சிறுமி...
சுற்றியிருந்த அத்தனை
கைகளும் கிழிக்கத் தொடங்கின
தத்தம் சேலை நுனிகளையும் துப்பட்டாத் துணிகளையும்
வேட்டி முனைகளையும்
திகைத்து நின்ற
"அம்மாவைத்" தவிர...
Subscribe to:
Posts (Atom)