Monday, December 31, 2012

வழி வழியாய் வரும் கதைகள்...



என்ன இருக்கிறது படிக்கவும் பார்வையிடவும்
வெள்ளைத்தாள் முழுவதும்
சிவப்பை மட்டுமே சிந்திக் கொண்டிருக்கும்
கருப்பு எழுத்துக்கள்..

பாட்டி தன் தாயிடம் கதை கேட்டாள்
புராணங்களும் இதிகாசங்களும்

பாட்டியிடம் என் தாய் கதை கேட்டாள்
கம்பராமாயணமும் கட்டபொம்பனும்

என் தாயிடம் நான் கேட்டேன்
திருக்குறளும் திருவிளையாடலும்

என் மகள் என்னிடம் கேட்டாள்
சிங்க ராஜாவையும் சிண்ட்ரெல்லாவையும்

தன் மகளுக்கு அவள் என்ன சொல்வாள்
வன்முறையையும் வன்புனர்வையுமா????..

Saturday, December 29, 2012

ஹைக்கூ...


யாருக்காகவோ எதற்காகவோ
சுற்றிக் கொண்டேயிருக்கிறது பூமி
வானமாய் நீ...

Wednesday, December 26, 2012

விளிம்பு நீரென...


வெளிச்சத்தில் மறைந்திருக்கும் இருளைப் போல

எனதான அத்தனையிலும் நீயே
நிறைந்திருக்கிறாய்...

உன் ஸ்பரிசம் தீண்டும் பொழுது
சிறகுகள் அமிழ்த்தி அமரும்
பருந்தைப் போல
ஒரு கனத்த மௌனம் 
மனதை அழுத்துகிறது...

நமது ஒவ்வொரு சந்திப்பின் 
முடிவும்

எதிர்கொள்ளமுடியாத ஒரு
உண்மையாய்... ஊமையாய்...
நான் திரும்பும் வழி நெடுகிலும்
தொடர்கிறது 
எனை உறுத்தவாரே...

குழந்தையின் புரிந்து கொள்ளமுடியாத
புன்னகையும் அழுகையும் போல
உன் மீதான காதலும் கசப்பும்
விளிம்பு நீரென என் கண்களில்

சொட்டியும் விடாமல் வற்றியும் விடாமல்...