மழை
நேரத்தில் நாம் சந்தித்ததில்லை
மழை
நனைத்த சாலையில் நாம்
கை
கோர்த்து நடந்ததில்லை..
மழைத்துளிகளின்
இடைவெளியில் நாம்
ஒதுங்கி
நனைந்ததில்லை...
சாரல்களில்
ஓரத்தில்
உடல் ஒட்டி நின்றதில்லை..
இருந்தும்
மழை வரும் போதெல்லாம்
நீ
வருவதாகவே நினைக்கிறேன்
ஆ(கா)தலால்
நனைகிறேன்...