Sunday, January 3, 2016

வெள்ளம் புகுந்த வீடு...

வெள்ளம் புகுந்து பாழ் அடைந்த வீடுகளில்
நாற்காலிகளும்
முக்காலிகளும்
கட்டில் கால்களும்
தட்டிக் கொட்டி
சரி செய்யப்படுவது போல
எட்டுக்காலியும் தனது
சிதைந்தறுந்த வீட்டை
ஒவ்வொரு மூலையிலும்
குறுக்கும் நெடுக்குமாய்
செப்பனிட்டுக் கொண்டிருக்கிறது...

No comments: