என்ன
இருக்கிறது படிக்கவும் பார்வையிடவும்
வெள்ளைத்தாள்
முழுவதும்
சிவப்பை
மட்டுமே சிந்திக் கொண்டிருக்கும்
கருப்பு
எழுத்துக்கள்..
பாட்டி
தன் தாயிடம் கதை கேட்டாள்
புராணங்களும்
இதிகாசங்களும்
பாட்டியிடம்
என் தாய் கதை கேட்டாள்
கம்பராமாயணமும்
கட்டபொம்பனும்
என்
தாயிடம் நான் கேட்டேன்
திருக்குறளும்
திருவிளையாடலும்
என்
மகள் என்னிடம் கேட்டாள்
சிங்க
ராஜாவையும் சிண்ட்ரெல்லாவையும்
தன்
மகளுக்கு அவள் என்ன சொல்வாள்
வன்முறையையும்
வன்புனர்வையுமா????..