Sunday, October 21, 2012
Wednesday, October 17, 2012
யுத்தம்...
அறை
எங்கும் சிதறிக் கிடந்தன
நாம்
ஒருவரை ஒருவர்
பேச்சுக்களால்
குதறிக் கொட்டிய
வார்த்தைகள்..
அவற்றின்
ஒவ்வொறு அங்கமும் கீறப்பட்டு
ரத்தம்
உறைந்தும் உறையாமலும்
விடைத்துக்
கொண்டிருந்தன...
இனி
வெட்டுவதற்கோ சிந்துவதற்கோ
வார்த்தைகள்
இல்லாது
தீர்ந்திருந்த
போழ்தில்...
உதட்டில்
ஒரு சிகரெட்டைப்
பொருத்திக்
கொண்டு
தலையை
உதறி வெளியில் சென்றாய் நீ...
துடைப்பமும்
முறமும் கொண்டு
அள்ள
ஆரம்பித்திருந்தேன் நான்...
நிசப்தமான
நம் அறை
அடுத்த
யுத்தத்தைப்
பேசிக்
கொண்டிருந்தது
நான்கு
சுவர்களுடன் மௌனமாக...
Labels:
உறவுக் கவிதைகள்...,
பொதுக் கவிதைகள்
Saturday, October 13, 2012
Thursday, October 4, 2012
நீயும்???... நானும்...
அனுமதி கேட்டு காதல் செய்தவனும் நீ
அனுமதியின்றி
காயம் செய்தவனும் நீ
மிட்டாய்
தொலைத்த குழந்தையாக
அழுது
நிற்கிறேன்
உனை
எதற்காகத் தொலைத்தேன்
என்பது
புரியாமலேயே..
தீராத
தனிமையின் மை கொண்டு
எழுதத்
துவங்குகிறேன் உனக்கான
ஒரு
கவிதையை...
எழுத்தின்
சுவடுகளாக
உன்னால்
கத்தரிக்கப் பட்ட
என்
சிறகுகளே வந்து விழுகின்றன...
விசாரிப்புகள்
ஏதும் அற்ற
உனது
தீர்ப்பை கூறும் முன்னமே
நீ
ஒடித்திருந்த
பேனா
முட்களின் முனைகளில்
நொறுங்கிவிட்டிருந்தேன்
நான்..
Subscribe to:
Posts (Atom)