Sunday, January 9, 2011

வெறுமையின் வருத்தம்








அகழ்வாராய்வில்
கிடைத்துக் கொண்டே
இருக்கிறது

ஆதாம் ஏவாளின்
காலடிச் சுவடும்
ஆதி மனிதனின்
சிக்கி முக்கிக் கல்லும்...

நானும் தேடிக் கொண்டே தான்
இருக்கிறேன்

கசங்கிய கனவுகளில்
கண்ணீர் மறைத்த நினைவுகளில்
தூசு தட்டிய ஞாபக அடுக்குகளில்...

எங்கேனும் கிடைக்கிறதா?
நாம் பேசிச் சிரித்த
மணித்துளிகளும்

கலங்கிப் பிரிந்த
கண்ணீர்த் துளிகளும் என்று...

ஒவ்வொறு தேடலின் முடிவிலும்
கிடைத்ததென்னவோ..

அழிக்கவும் முடியாத
அழவும் முடியாத
ஒரு வெறுமையின்
வருத்தம் மட்டும்....

No comments: