
என் மௌனங்களை
மொழிபெயர்த்தவன் நீ ...
நீ விதைத்த மௌனங்கள்
இன்று என்னுள் முளையாகி
கொடியாகி பூத்துக் கொண்டிருக்கிறது
கவிதைகளாக...
வேரில் உன் வாசம்
இலைகளில் உன் சுவாசம்
கிளைகளில் உன் நேசம்
என வளர்த்து...
அரும்புகளில் என் உயிர் சேர்த்து
உனக்கென மலர்விக்கிறேன்...
என் கவிதைக் கொடியில் பூக்கும்
ஒவ்வொரு பூக்களும்
உனைச் சேரும்
ஜென்மங்கள் தோறும்...
No comments:
Post a Comment