Wednesday, May 14, 2014

குறுங்கவிதைக‌ள்...,


பட்டாம்பூச்சிகள் கொள்ளை அழகுதான்
ஆனாலும்
நீ பார்க்கையில்
என் இமை துடித்திடும்
அழகுக்கு நிகராக இல்லை!!!...

***************

நீயே ஒப்புக்கொள்ளும்
உன்னின் ஆக்கச் சிறந்த
அழகான பொய்
நான் தான்...

****************
காத்திருந்த வேளைதனில்
வேர்த்த்ருந்த என் புருவங்களை
வருடிச் சென்றது
உன் குளிர்ந்த பார்வை..

***************

உன்னைச் சொல்லாத
உன்னிடம் சொல்லாத
எதுவும் கவிதை இல்லை
வெறும் சொற்களே...




2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

குறுங்கவிதைகள் எல்லாமே குறுகுறுப்புடன் ஏதோ சொல்லத் துடிப்பதாய் அழகாக உள்ளன. பாராட்டுக்கள்.

SOS said...

வருகைக்கும் உடனடி பின்னூட்டியதற்கும் மிக்க நன்றி வை.கோ சார்.