Monday, December 15, 2014

உனக்கும் எனக்கும் நடுவே....

உனக்கும் எனக்கும் நடுவே
நிறைய கொஞ்சல்கள்
இருந்தன
முரண்பட்ட கெஞ்சல்கள்
இருந்தன
கேலிகள் இருந்தன

நிறைய கவிதைகள்
இருந்தன
கூடவே சின்ன சின்னதாய்
சில பொய்களும்
மத்தாப்புச் சிதறலாய்
சில சிரிப்புகளும்...

இப்போது
உனக்கும் எனக்கும் நடுவே
பொதுவான மௌனம்
காற்றின் இடைவெளியை
நிரப்பியபடி ஊஞ்சலாடிக்
கொண்டிருக்கிறது...

உன் பக்கம் வருகையில்
என் முகத்தைப் பார்த்தபடியும்
என் பக்கம் திரும்புகையில்
உன் முகத்தைப் பார்த்தபடியும்....

Saturday, December 13, 2014

உன் வாசம்....

நீ வந்து போன
என் ரோஜாத் தோட்டத்தின்
மூலை எங்கும்
நித்யமல்லி வாசம்

Thursday, November 27, 2014

சில கவிதைகள்......

நீ
நான்
சில கவிதைகள்
சொல்வதற்கும்
சொல்லும் போதே மறப்பதற்கும்...

Thursday, November 13, 2014

இம்மழை.....

சிறு தூரல்களில்
உன் புன்னகையையும்
பூஞ் சாரல்களில்
உனதன்பையும்
தொடர் பொழிவுகளில்
உன் பேச்சையும்
அடித்துப் பெய்கையில்
உன் கோபத்தையும்
எப்போதும் இம்மழை
உனை
நினைவூட்டுவதாகவே இருந்துவிடுகிறது..

நீ இல்லை....


அடித்துப் பெய்கிறதே?!...
இந்த மழைக்கான
மேகம்
நீ இல்லை....

Saturday, September 13, 2014

எனக்காகவே.....


எந்நேரத்திலும் என் கை
நழுவி விடும்
விதைதான் நீ
எனக்குத் தெரியும்
எங்கு விழுந்தாலும்
எனக்காகவே
பூப்பாய் என்று....

Sunday, September 7, 2014

நீ....

இரவுகளைப் போலத்தான் நீயும்
அலாதியான  ரகசியங்களையும்
விடுபடாத புதிர்களையும்
பொத்தி வைத்து சுவாரசியம் கூட்டுவதில்