Saturday, August 22, 2015

நிறம் உதிர்த்த.....

பிடித்திருந்த கைகளை
உதறிக் கொண்டாய்
பறத்தலின் திசை
தெறியாது நகர்கிறேன்
என் நிறங்களை
உன் உள்ளங்கைளில்
உதிர்த்துவிட்டு....

Friday, August 21, 2015

கண்ணாம்மூச்சி....

எப்போதும் அழைப்புப்
பதிவுகளில்
மேலிருக்கும் உனது எண்
இப்போதெல்லாம்
மேலெழுப்பப் படுகிறது
வந்து போன அழைப்புகளை
அழித்துப் பார்க்கையில்...

Wednesday, August 5, 2015

இரட்டைச் சந்தோஷம்....


எனது கவிதைகள் இந்த வார 
குமுதம் இதழிலும்
இம் மாத 
மல்லிகை மகள் இதழிலும்..







Friday, July 10, 2015

காதல் சமைப்போம் வா...

கடிகார முட்களாய்
சுற்றி வருகிறது
உன் நினைவுகள்
நெஞ்சுக் கூட்டில்

பெண்டுலமாய் ஆடுகிறது
விழிகள் நீ நகரும்
திசை நோக்கி

அலாரமாய் அதிர்கிறது 
இதயம்
உன் விரல் நுனி
தீண்டலில்

பன்னிரு முறையல்ல
பன்னிரண்டிலாவது சேர்ந்து
காதல் சமைப்போம் 
வா...

ஏதோ ஒரு துளியில்...

உனை 
நனைத்துக் கொண்டிருக்கும்
அம் மழையின்
ஏதோ ஒரு துளியில்
கரைந்து கொண்டிருக்கிறேன்
நான்....

Thursday, June 25, 2015

......

புள்ளிகளுக்குள் அடங்கிவிடாத
கோட்டுக் கோலத்தின்
மையப் புள்ளியாய்
நீ...

Sunday, June 14, 2015

சமாதானம்....

ஆயிரம் இசைகள் இருந்தாலும்
உன்னோடு இசைந்திருக்கும்
இந்த ஒற்றைக்  குறிப்பின்
உயிர் கசிவு
போதுமானாதாய் இருக்கிறது
நம் சண்டையை
சமாதானத்துக்கு இழுத்து வர.